அரியலூரில் லாரி - கார் மோதி விபத்து: 4 பேர் பலி

நின்றுகொண்டிருந்த லாரியின் பின்னால் கார் பயங்கரமாக மோதியது.

Update: 2024-05-07 13:51 GMT

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அருகே அரியலூர் -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது வேகமாக வந்த கார் ஒன்று நின்றுகொண்டிருந்த லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இன்று மாலை நடந்த இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். விபத்தி்ல் பலியான நான்கு பேரும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்