மிசோரமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.6 ஆக பதிவு
மிசோரமில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது.
அய்சாவல்,
மிசோரமின் சேம்பாய் நகரில் இருந்து தென்மேற்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் இன்று மாலை 5.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகி உள்ளது.
இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.