கேரளாவில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-05 15:44 GMT
திருவனந்தபுரம், 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவில் பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,429 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 117 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 57 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும், 38 பேர் தொடர்பில் இருந்தவர்களுக்கும் உறுதியாகி உள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,228 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1,80,939 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும், மாநிலத்தில் 153 கொரோனா ஹாட்ஸ்பாட்கள் பகுதிகள் உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்