இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 38,902 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 38,902 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 38,902 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,38,716லிருந்து 10,77,618ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 543 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273லிருந்து 26,816ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,53,751லிருந்து 6,77,423ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,73,379 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.