ராஜஸ்தானில் மேலும் 611 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராஜஸ்தானில் மேலும் 611 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-07-26 06:05 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. 

இந்நிலையில் ராஜஸ்தானில் இன்று காலை 10.30 மணி வரை மேலும் 611 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,909 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கொரோனா தொற்றுக்கு மாநிலத்தில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 9,935 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை மாநிலத்தில் 25,353 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்