மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 7,717 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 7,717 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-28 17:11 GMT
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று 7,717 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,91,440 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 282 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,165 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் 10,333 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,32,277 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,44,694 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்