சசிகலா விவகாரத்தில் பரபரப்பை கிளப்பிய ரூபா ஐபிஎஸ் உள்துறை செயலராக நியமனம்

சசிகலா விவகாரத்தில் பரபரப்பை கிளப்பிய ரூபா ஐபிஎஸ் கர்நாடக உள்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-08-05 05:12 GMT
பெங்களூரு,

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவிற்கு சிறை விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதாக  கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ரூபா ஐபிஎஸ்.

பெங்களூரு ரயில்வேயில் ஐ.ஜி.பி. ஆக பணியாற்றி வந்த ரூபா,  கர்நாடக மாநில உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தில் இப்பதவியில் பொறுப்பேற்கும் முதல் பெண் அதிகாரி என்கிற பெருமையை ரூபா பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்