புனே மாவட்டத்தில் இன்று மேலும் 2,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புனே மாவட்டத்தில் இன்று மேலும் 2,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Update: 2020-08-05 18:17 GMT
புனே,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதில் மும்பை, புனே, தானே போன்ற இடங்களில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

இந்நிலையில், இன்று புனே மாவட்டத்தில் மேலும் 2,331 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாவட்ட முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97,309 ஆக அதிகரித்துள்ளது.

இன்று புனேயில் மேலும் 46 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,231 ஆக உயர்ந்துள்ளது.

புனே மாவட்ட முழுவதும் 68,775 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது வரை 26,274 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்