காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே மோதல்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சிகான்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படை மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், பாதுகாப்பு பிரிவினருக்கும் மற்றும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.