கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

கொரோனா பாதிப்பில் இருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குணமடைந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-08-09 07:18 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் பாதிப்பு உறுதியானது.  கடந்த ஒரு வாரம் வரை அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

மத்திய மந்திரி அமித்ஷா மத்திய அமைச்சரவையில் கொரோனா பாதிப்புக்கு ஆளான முதல் உறுப்பினர் ஆவார்.  எனினும், தொடர்ந்து தனது அலுவலக பணிகளையும் மேற்கொண்டார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு பற்றி நடந்த பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இல்லை என உறுதியானது.  இதுபற்றிய தகவலை பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்