நேபாளத்திற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை இந்தியா வழங்கியது

நேபாளத்திற்கு ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை இந்தியா வழங்கியுள்ளது.

Update: 2020-08-09 16:04 GMT
காத்மாண்டு,

நேபாள தலைநகர் காத்மண்டில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நேபாளத்திற்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 10 வென்டிலேட்டர்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளது இதன் மதிப்பு ரூ.2.8 கோடி ஆகும்

இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா வென்டிலேட்டர்களை வழங்க, நேபாள ராணுவ தலைமை அதிகாரி பூர்ண சந்திர தபா பெற்றுக் கொண்டார். மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் மொத்தம் 22,592 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 73 பேர் நோய் தொற்றால்உயிரிழந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக டாஷ்போர்டு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்