டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2020-08-15 01:50 GMT
புதுடெல்லி,

இந்திய சுதந்திர தின விழா இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

டெல்லி செங்கோட்டைக்கு வரும் முன்பாக பிரதமர் மோடி, பாரம்பரிய வழக்கப்படி  டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசப்பிதா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  

மேலும் செய்திகள்