டெல்லியில் இன்று மேலும் 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-25 15:00 GMT
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக ஆயிரத்திற்கு கீழ் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு  தற்போது ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. 

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,64,071 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,330 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில்ம் இன்று 1,155 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,47,743 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 11,998 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்