முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவர்கள் தகவல்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-08-29 18:01 GMT
புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84) டெல்லியில் உள்ள ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மூளையில் இருந்த ரத்த கட்டி ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. மேலும் கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. நுரையீரலில் தொற்று இருப்பதால் அதற்காகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோமா நிலையில் இருக்கும் பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, இதயத்தின் செயல்பாடு சீராக இருப்பதாகவும், சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்பட்டு உள்ளதாகவும், இதனால் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்