எல்லையில் நடந்தது துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி பலி

எல்லையில் நடந்தது துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.

Update: 2020-08-30 21:24 GMT
ஜம்மு,

காஷ்மீரில் ரஜவுரி மாவட்டம் நவுசரா பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவத்தினர் நேற்று ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய நடமாட்டத்தை கண்டனர்.

திடீரென, எல்லைக்கு அப்பால் இருந்து அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தொடங்கியது. இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில், இந்திய ராணுவ இளம் அதிகாரி ஒருவர் பலியானார்.

மேலும் செய்திகள்