அந்தமான்&நிகோபார் தீவுகளில் மேலும் 23 பேருக்கு கொரோனா

அந்தமான் & நிகோபார் தீவுகளில் மேலும் 23-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-31 00:51 GMT
போர்ட்பிளேர், 

யூனியன் பிரதேசமான அந்தமான்  நிகோபார் தீவுகளில் மேலும் 23  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தமானில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,104- ஆக உயர்ந்துள்ளது.  

தொற்று பாதிப்புடன் 473- பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  2,586-பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். அங்கு இதுவரை 45-பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்