அந்தமான்&நிகோபார் தீவுகளில் மேலும் 23 பேருக்கு கொரோனா
அந்தமான் & நிகோபார் தீவுகளில் மேலும் 23-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போர்ட்பிளேர்,
யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தமானில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,104- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்புடன் 473- பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2,586-பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். அங்கு இதுவரை 45-பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.