ஓணம் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து

ஓணம் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி மலையாள மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-31 04:37 GMT
புதுடெல்லி,

மலையாள மக்களால் மகிழ்வுடன் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  கொரோனா தொற்று பாதிப்புக்க்கு மத்தியில் ஓணம் பண்டிகை வருவதால், மக்கள்  மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள்ளேயே கொண்டாடுமாறு கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  

பொது நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்க வேண்டாம் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தியில்,   இந்த ஓணம் திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும் “ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்