ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-01 17:03 GMT
ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,45,139 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 84 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,053 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 1,01,210 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 3,39,876 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்