மும்பையில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

மராட்டிய மாநிலம் மும்பையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2020-09-07 03:45 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் வடக்கே 108 கி.மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவான நிலநடுக்கம் இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. மும்பையில் கடந்த சில தினங்களாக லேசான நிலநடுக்கங்கள் பதிவாகி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்