மும்பையில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு
மராட்டிய மாநிலம் மும்பையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையின் வடக்கே 108 கி.மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவான நிலநடுக்கம் இன்று காலை 8 மணியளவில் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. மும்பையில் கடந்த சில தினங்களாக லேசான நிலநடுக்கங்கள் பதிவாகி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.