அரியானா மாநில கல்வித்துறை அமைச்சர் கன்வர் பாலுக்கு கொரோனா

அரியானா மாநில கல்வித்துறை அமைச்சர் கன்வர் பாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-09 10:20 GMT
சண்டிகார்,

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், அரியானா மாநில கல்வித்துறை அமைச்சர் கன்வர் பாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் “ நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள், தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்