மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியுள்ளது.

Update: 2020-09-11 15:04 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மராட்டியம் தான் உள்ளது.

இந்த நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மராட்டியத்தில் மேலும் 24,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,15,681 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 393 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,724 ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,15,023 ஆக உள்ளது. மேலும் 2,71,566 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்