ஊதியக் குறைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை குறைப்பதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2020-09-15 12:41 GMT
புதுடெல்லி,

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஊதியத்தை ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைப்பதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்ற விவகாரத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். 

நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வூதிய திருத்த அவசரச் சட்டம்-2020 என்ற அவசரச் சட்டத்துக்கு மாற்றாக இந்த நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஊதியம், படி மற்றும் ஓய்வுதிய திருத்த மசோதா-2020 அறிமுகம் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பின் போது மக்களுக்கு விரைவான நிவாரணம், உதவிகள் வழங்கவேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டமானது கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை குறைப்பதற்கான மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்