மத்திய பிரதேசத்தில் புதிதாக இன்று 2,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய பிரதேசத்தில் இன்று 2,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-15 15:35 GMT
இந்தூர்,

மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று மாநிலம் முழுவதும் 2,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,053 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா பாதிப்பால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,820 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 69,613 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 21,620 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்