கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது- ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசு கொரோனா பெருந்தொற்று, நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை முறையாக கையாளவில்லை என்று ராகுல் காந்தி மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
”தரவுகள் இல்லாத அரசு. விளக்கேற்றுவதையும், தட்டுகளை தட்டுவதையும் விட கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களின் பாதுகாப்பும் மரியாதையும் முக்கியம். கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பது ஏன்” என தெரிவித்துள்ளார்.