கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது- ராகுல் காந்தி பாய்ச்சல்

கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-18 08:01 GMT
புதுடெல்லி,

மத்திய அரசு கொரோனா பெருந்தொற்று, நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றை முறையாக கையாளவில்லை என்று ராகுல் காந்தி மத்திய அரசு மீது தொடர்ந்து  குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.  ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

”தரவுகள் இல்லாத அரசு. விளக்கேற்றுவதையும், தட்டுகளை தட்டுவதையும் விட கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களின் பாதுகாப்பும் மரியாதையும் முக்கியம். கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பது ஏன்” என தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்