கேரளாவில் இதுவரை இல்லாத உச்சம்; ஒரே நாளில் 5,376-பேருக்கு கொரோனா

கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-09-23 13:21 GMT
திருவனந்தபுரம்,

கேரளவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் சீராக உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால், தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை  அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக ஒரே நாளில் 5,376-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை  42,786- ஆக உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,951 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்