ரோடியர் மில்லை தொடர்ந்து புதுச்சேரியில் மேலும் 2 மில்கள் இன்று முதல் மூடல்

புதுச்சேரியில் ரோடியர் மில்லை தொடர்ந்து மேலும் 2 மில்கள் இன்று முதல் மூடப்படுகின்றன.

Update: 2020-09-29 21:54 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியின் அடையாளமாகவும், மாநில பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாகவும் ரோடியர், பாரதி, சுதேசி ஆகிய 3 பஞ்சு மில்கள் இருந்து வந்தன. இந்த மில்கள் கடந்த 20 ஆண்டுகளாக உற்பத்தி திறன் குறைந்து நலிவடைந்தன. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோடியர் மில் மூடப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்தது.

இந்த நிலையில் பாரதி மில், சுதேசி மில் ஆகியவையும் இன்று (புதன்கிழமை) முதல் மூடப்படுவதாக புதுச்சேரி அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

மில்களை சீரமைத்து செயல்படுத்தவும், ஆயத்த ஆடை பூங்கா அமைக்கவும் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போனதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்