மேற்கு வங்காளத்தில் இன்று 3,370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 3,370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-06 15:18 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று 3,370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்கு வங்காளத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,77,049 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் இன்று 63 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,318 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 27,988 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 2,43,743 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்