இமாச்சல பிரதேசத்தில் புதிதாக 170- பேருக்கு கொரோனா

இமாச்சல பிரதேசத்தில் புதிதாக 170- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-18 17:23 GMT
சிம்லா, 

இமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று மேலும் 170- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதேபோல், இன்று கொரோனா தொற்றில் இருந்து 217- பேர் குணம் அடைந்துள்ளனர்.  இமாச்சல பிரதேசத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,967- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பால் அம்மாநிலத்தில் இதுவரை 263- பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனாவில் இருந்து அம்மாநிலத்தில் இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 16,040- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 2,630- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல்களை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்