ஜெய்சங்கருடன் அமெரிக்க மந்திரி போம்பியோ சந்திப்பு

டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை அமெரிக்க மந்திரி போம்பியோ சந்தித்து பேசினார்.

Update: 2020-10-26 15:44 GMT
புதுடெல்லி,

இந்தியா, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகளின் மாநாடு நாளை (அக்.27) நடக்கிறது. இதில் பங்கேற்க அமெரிக்க மந்திரிகள் இன்று இந்தியா வந்துள்ளனர். 

இன்று மாலை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் போம்பியோ, மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்தியா-சீன எல்லை பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் நாளை நடக்க உள்ள மாநாட்டில் இவ்விவகாரம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்