தெலுங்கானாவில் கொள்ளை வழக்கில் 4 நேபாளிகள் கைது

தெலுங்கானாவில் வீட்டு வேலைக்காக பணியில் சேர்ந்த நேபாளிகள் 4 பேரை கொள்ளை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-27 00:12 GMT
ரங்காரெட்டி,

தெலுங்கானாவில் நச்சாரம் பகுதியில் எச்.எம்.டி. நகரில் சித்தபுளுசு பிரதீப் குமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவரது வீட்டில் இருந்து ரூ.10 லட்சம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை போயுள்ளன.  இதுபற்றி போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார்.

இதன்பேரில் 15 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.  அவர்கள் மஞ்சு (வயது 35), ஹேம்பிரசாத் (வயது 44), சாத் (வயது 42) மற்றும் விஸ்னா சுனார் (வயது 40) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  அனைவரும் நேபாள நாட்டினர்.

இவர்களில் மஞ்சு மற்றும் கசேரா என்பவர் தம்பதி என அறிமுகப்படுத்தி கொண்டு பிரதீப்பின் வீட்டில் பணியாளாக சேர்ந்துள்ளனர்.  சம்பவத்தன்று பிரதீப்பின் தாயாருக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து உள்ளனர்.  இதில் அவர் மயக்கமடைந்து உள்ளார்.  இதனை பயன்படுத்தி வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பியோடி உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1.49 லட்சம் மதிப்பிலான தங்கம், 2 கைக்கெடிகாரங்கள், தூக்க மாத்திரைகள் கொண்ட அட்டை, மொபைல் போன் ஒன்று ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்