காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் அரிபாக் மச்சம்மா என்ற இடத்தில் பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் நடந்தது.
இதில் இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டு சண்டையிட்டனர். இந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் எந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இதனை காஷ்மீர் மண்டல போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். இதேபோன்று அந்த பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.