டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 5,673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 5,673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-28 19:28 GMT
புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,70,014 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 40 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,396 ஆக உயர்ந்துள்ளது. தற்போது டெல்லியில் 29,378 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 3,34,240 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்