மும்பையில் இன்று மேலும் 858 பேருக்கு கொரோனா தொற்று

மும்பையில் இன்று மேலும் 858 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-12 16:52 GMT
மும்பை, 

நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில்  கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நோய் பாதிப்பில் இருந்து குணமணடைந்துவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 604-ஆக உள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,522 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் இன்று ஒரே நாளில் 2,175 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,41,975 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் தற்போது வரை 11,531 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்