ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாக்.ட்ரோன் விமானம் பறந்ததால் பரபரப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் பறந்தது.

Update: 2020-11-29 03:05 GMT
ஸ்ரீநகர்,

எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுத்தினரின் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.  பயங்கரவாதிகளும் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ, தக்க சமயம் பார்த்துக்கொண்டு இருப்பதால், இந்திய ராணுவம் கூடுதல் விழிப்புடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ் புரா பகுதியில் உள்ள எல்லையில் பாகிஸ்தானின் ட்ரோன் விமானம்  நேற்று இரவு பறந்தது. இதை உடனடியாக கவனித்த இந்திய வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் பாகிஸ்தான் பகுதிக்குள் மின்னல் வேகத்தில் திரும்பிச் சென்றது. 

மேலும் செய்திகள்