ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 2,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று புதிதாக 2,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-29 18:03 GMT
ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 2,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,65,386 ஆக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தானில் இன்று 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,292 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,34,336 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 2,65,386 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்