உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.9 ஆக பதிவு

உத்தரகாண்டில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

Update: 2020-12-01 05:27 GMT
ஹரித்துவார்,

உத்தரகாண்டில் ஹரித்துவார் அருகே இன்று காலை 9.41 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்