ஆந்திர மாநிலத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திர மாநிலத்தில் இன்று புதிதாக 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-12-01 13:59 GMT
ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,68,749 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இதுவரை 6,996 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 8,54,326 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 7,427 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக, ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்