ஆந்திராவில் இன்று 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திர மாநிலத்தில் இன்று 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-12-02 14:18 GMT
ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,69,412 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் இன்று 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,003 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 8,55,485 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 6,924 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்