பொருளாதார குறியீடுகள் நம்பிக்கை அளிக்கிறது - இந்திய தொழில் கூட்டமைப்பு விழாவில் பிரதமர் மோடி

பொருளாதார குறியீடுகள் நம்பிக்கை அளிப்பதாக இந்திய தொழில் கூட்டமைப்பு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-12 06:46 GMT
புதுடெல்லி, 

இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் 93-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்திலும், வருடாந்திர மாநாட்டிலும், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடக்க உரையாற்றினார். 

அதில் பேசிய பிரதமர் மோடி, “20-20 போட்டியில் நிறைய விஷயங்கள் வேகமாக மாறுவதைக் கண்டோம். ஆனால் 2020 அனைவரையும் குழப்பியது. தேசமும், முழு உலகமும் நிறைய ஏற்ற தாழ்வுகளைக் கண்டன. சில வருடங்கள் கழித்து கொரோனா காலத்தைப் பற்றி நாம் நினைக்கும் போது, ஒருவேளை நாம் அதை நம்ப முடியாது. விஷயங்கள் விரைவாக மேம்படுவது நல்லது. 

பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தொற்றுநோய் தொடங்கியபோது, நாங்கள் அறியப்படாத எதிரிக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தோம். நிறைய நிச்சயமற்ற நிலைகள் இருந்தன. அது உற்பத்தி, தளவாடங்கள், பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி என்று பல சிக்கல்கள் இருந்தன. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதுதான்  கேள்வியாக இருந்தது.

டிசம்பர் மாதத்திற்குள் நிலைமை மாறிவிட்டது. எங்களிடம் தற்போது இதற்கான தெளிவான பதில்கள் உள்ளன. இன்றைய பொருளாதார குறியீடுகள் நம்பிக்கை அளிக்கிறது. நெருக்கடியின் போது தேசம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எதிர்காலத் தீர்மானங்களை மேலும் வலுப்படுத்தி உள்ளன

கடந்த 6 ஆண்டுகளில் உலகம் இந்தியா மீது வைத்திருந்த நம்பிக்கை, கடந்த சில மாதங்களில் மேலும் வலுப்பெற்றது. அந்நிய நேரடி முதலீடு அல்லது எப்.பி.ஐ ஆக இருந்தாலும் - வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் சாதனை முதலீடுகளைச் செய்துள்ளனர், தொடர்ந்து அதைச் செய்கிறார்கள்

ஆத்மனிர்பர் பாரத் அபியான் ஒவ்வொரு துறையிலும் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்தியா நீண்டகால போட்டி நன்மைகளைக் கொண்ட துறைகளில் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்களை மீண்டும் உற்சாகப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

2020 டிசம்பர் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெறுகிறது. "ஊக்கம் பெற்ற இந்தியா" என்பதே இந்த வருட மாநாட்டின் மையக் கருவாகும். பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகள், தொழில் துறை தலைவர்கள், தூதர்கள், சர்வதேச நிபுணர்கள், முன்னணி பிரமுகர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

பொருளாதாரத்தின் மீது கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும், அரசால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், இந்திய பொருளாதாரத்திற்கான வருங்கால பாதை குறித்தும் இந்த மாநாட்டின் போது பல்வேறு பங்குதாரர்கள் விவாதிப்பார்கள். உலகெங்கிலும் உள்ள வர்த்தகர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தவும், வியாபார சாத்தியங்களை அதிகரித்துக் கொள்ளவும் இந்தக் கண்காட்சி உதவும்.

மேலும் செய்திகள்