பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து மந்திரி சந்திப்பு
இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப், 3 நாள் பயணமாக கடந்த 14-ந் தேதி இந்தியாவுக்கு வந்தார்.
புதுடெல்லி,
இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப், 3 நாள் பயணமாக கடந்த 14-ந் தேதி இந்தியாவுக்கு வந்தார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இந்தநிலையில் நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். கொரோனாவுக்கு பிந்தைய சூழ்நிலையில் இந்தியா-இங்கிலாந்து ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதித்தனர்.
இத்தகவலை பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக மோடி கூறியுள்ளார்.