கேரளாவில் மேலும் 5,711 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் மேலும் 5,711 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளத்தில் இன்று மேலும் 5,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, கேரளாவில் மேலும் 5,711- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து 4,471- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். இதுவரை 6,41,285 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 30 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 2,816ஆக உயர்ந்துள்ளது.