ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீச்சு: 3 வீரர்கள் காயம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் மூன்று பேர் காயம் அடைந்தனர்.

Update: 2020-12-23 12:08 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் கந்தெர்பெல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படையினரை  குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

 இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்