பீகாரில் விவசாயிகள் பேரணியில் போலீசார் தடியடி; பலர் படுகாயம்

3 வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் கடந்த சில வாரங்களாக நீடித்து வருகிறது.

Update: 2020-12-29 21:25 GMT
பாட்னா, 

3 வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரின் தலைநகர் பாட்னாவில் நேற்று இடதுசாரி விவசாயிகள் சங்கங்கள் இணைந்து கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். 

அனுமதிக்கப்பட்ட வழிப்பாதைக்கு பதிலாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்திற்கு அவர்கள் சென்றதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது கவர்னர் மாளிகைக்கு பேரணியாக செல்ல அனுமதி இல்லை என்றும், அனைவரும் கலைந்து செல்லுமாறும் போலீசார் அறிவுறுத்தினர்.

ஆனால் போராட்டக்காரர்கள் மறுத்ததால் போலீசார் அனைவரையும் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் பல விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்