இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு நெஞ்சுவலி ;மருத்துவமனையில் அனுமதி
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.