மராட்டியத்தில் மேலும் 2,910- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,910- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-01-16 14:34 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் இன்று மேலும் 2,910 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனாவால் அம்மாநிலத்தில் இன்று 52- பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 84 ஆயிரத்து 127 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்து388- ஆக உள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்புடன்  51 ஆயிரத்து 965- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்