ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.

Update: 2021-01-17 04:07 GMT
ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள மகேஷ்பூரில் சனிக்கிழமை(நேற்று) இரவு 10.30 மணியளவில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து தீடீரென தீப்பிடித்து எரிந்தது. மின்சார வயர் மீது பேருந்து உரசியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக ஜோத்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்