கேரளாவில் இன்று 3,346- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று புதிதாக 3,346- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்று 3,346- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 3,921- பேர் குணம் அடைந்துள்ளனர்.
மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 51 ஆயிரத்து 194- ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 லட்சத்து 79 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 68 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.