இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்வு
இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 141- ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய கொரோனா தொற்று இந்தியாவிலும் தொடர்ந்து பலரிடம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்கிருந்து நாடு திரும்பியவர்களிடம் நடத்தப்படும் பரிசோதனைகளில் இது உறுதியாகிறது. .
இந்தியாவில் புதியவகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ நாட்டில் புதியவகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141ஆக அதிகரித்துள்ளது.
புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது