கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் பலியான வீரர்களுக்கு கவுரவம்
கல்வான் பள்ளத்தாக்கில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்கள், டெல்லியில் உள்ள போர் வீரர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டது.
புதுடெல்லி
லடாக்கின் கிழக்கு பகுதியில் அத்து மீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்தநிலையில், குடியரசு தினம் நெருங்குவதையொட்டி, கல்வான் பள்ளத்தாக்கில் பலியான 20 இந்திய வீரர்களின் பெயர்கள், டெல்லியில் உள்ள போர் வீரர் நினைவுச்சின்னத்தில் பொறிக்கப்பட்டது. அவர்களுக்கு குடியரசு தினத்தன்று வீர தீர செயலுக்கான விருது வழங்கப்படும் என்றும் தெரிகிறது.