சபரிமலை: மாதாந்திர பூஜையில், நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க கேரள அரசு அனுமதி
சபரிமலையில் அடுத்த மாதம் நடைபெறும் மாதாந்திர பூஜையில், நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
திருவனந்தபுரம்,
2020-2021 மண்டல மகர விளக்கு சீசன் நிறைவு பெற்று, மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 12-ந் தேதி திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில் சபரிமலையில் அடுத்த மாதம் நடைபெறும் மாதாந்திர பூஜையில், நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளொன்றுக்கு 15,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாசிமாத பூஜையின் போது அனுமதிக்க கேரள அரசிடம் தேவசம்போர்டு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.